காலி, களுத்துறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் பசறை, காலி மாவட்டத்தின் நெலுவ மற்றும் எல்பிட்டி பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்த மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.