மதுபானசாலையை திறந்து வாழ்க்கையை சீரழிக்காதே என தெரிவித்து குயில்வத்தை மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

0
137

ஹட்டன் குயில்வத்தை பகுதியில் மதுபானசாலை ஒன்றினை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
குயில்வத்தை மிகவும் பிரசித்திபெற்ற சிவன் ஆலயத்திற்கு சமீபமாக குயில்வத்தை ரொசல்ல பகுதியில் மதுபானசாலை ஒன்றினை அமைப்பதற்கு மது வரி திணைக்களத்தில் அனுமதி கோரியுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு இருப்பின் 14 பிரதேச செயலாளருக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவித்து அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த அறிவித்தலை தொடர்;ந்து குயில்வத்தை பகுதியில் வாழும் மக்கள் மதுபானசாலை அமைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் 21.09.2023 ம் திகதி அன்று மாலை 200 மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பொது மக்கள் இணைந்து மது பானசாலையினை திறந்து வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம் என கோரி ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை எண்ணை நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்கார்கள் குடியை ஊக்குவித்து உன் ஊதியத்தை பெருக்காதே,போதை விற்றால் தண்டனை போதை கொடுப்போருக்கு லைசனா? தனிமனித வாழ்க்கைக்காக சமூகத்தை அழிக்காதே,ரோட்டில் பாரை திறந்து வீட்டில் போர் மூட்டாதே போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணம் வேண்டாம் பார் வேண்டாம் என கோசமிட்டனர்.
அதனை தொடர்ந்து பலர் கருத்து தெரிவித்தனர் இதில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் மலையகம் 200 என பல விழாக்களை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இன்று இந்த 200 முன்னிட்டு 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கலாம்,தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கலாம்,.இல்லாவிட்டால் 200 வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கலாம், வீதிகளை அபிவிருத்தி செய்திருக்கலாம் இந்த பார் திறப்பதா இப்போது முக்கியம் மலையகப் பகுதியில் உள்ள பார்கள் காரணமாக இன்று கல்வி சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை தேவைகள் இல்லாது போய் உள்ளன.

இந் நிலையில் மீண்டும் ஒரு பார் திறக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினர். இது குறித்து மற்றுமொருவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட்டவளையிலிருந்து ஹட்டன் வரை உள்ள குறிப்பிட்ட தூரத்தில் சுமார் 7 பார்கள் உள்ளன இந் நிலையில் இன்னொமொரு பார் எதற்கு இங்கு ஒரு கூட்டறவு கடையினை திறந்திருக்கலாம்,மருந்தகம் ஒன்றினை திறந்திருக்கலாம்,அவ்வாறு எதுவுமே செய்யாது ஒரு தனி மனிதனின் பிழைப்புக்காக ஒரு சமூகத்தையே அழிக்கிறார்கள் என தெரிவித்தார்.

இது குறித்த இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கையில் இங்கே பிரதான ஆலயம் ஒன்றும் அண்மையில் சிறந்த உயர்தர பெறுபேறுகளை பெற்ற குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயம் இங்கே தான் இருக்கின்றன. மாணவர்கள் வீதியில் நடந்து செல்லும் போது இந்த பாரை பார்த்து தான் செல்வார்கள் அதனால் அவர்களும் இந்த குடி பழக்கத்திற்கு ஆளாகி அவர்களின் வாழ்க்கையும் வீணாகும் குடியிருப்பு அருகில் இந்த பார் அமைவதானால் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பங்களும் சீரழியும் அது மாத்திரமின்றி ஏற்கனவே பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மேலும் இந்த குடி பழக்கத்திற்கு ஆளாகி பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு கலை கலாசாரங்களும் இல்லாது போகும் நிலமை உருவாகும் எனவே இவ்விடத்தில் பார் அமைப்பதை எமது மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நிறுத்துவதற்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை போராட்டம் நடைபெற்று மக்கள் களைந்து சென்றனர். எது எவ்வாறான போதிலும் மலையகப்பகுதியில் மதுசாலைகள் அதிகரிப்பின் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் தோற்றுவித்துள்ளன உழைக்கும் ஊதியம் முழுவதும் சிலர் மதுபானசாலைகளுக்கு செலவிடுகின்றனர். இதனால் திறமையான மாணவர்கள் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளன. எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here