நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மழை நாட்டில் நேற்று முதல் அடை மழை பெய்து வருகிறது இந்த அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.தொடர்ந்து பெய்து மழை காரணமாக் அன்றாட தொழிலில் ஈடுபடுவது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக பெருந் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மழையுடன் பனி மற்றும் குளிருடனான காலநிலை காணப்படுவதனால் தொழிலாளர்கள் வருகை குறைந்துள்ளன. இதனால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.
மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல கினிகத்தேனை,கடவலை தியகல,வட்டவளை,ஹட்டன் உள்ளிட்ட பகுதியிலும் ,ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம,கொட்டகலை,தலவாக்கலை,சென்கிளையார்,லிந்துலை,நானுஓயா ரதல்ல ஆகிய பிரதேசங்களில் அடிக்கடி பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு செல்வதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிசார் வலியுறுத்தியுள்ளன.
மலைவாஞ்ஞன்