மலையக மக்களின் காணி உரிமை, வீட்டு திட்டம் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றிருந்தது.
இதன்போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் K.V. சமந்த வித்தியாரத்ன, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் பெருந்தோட்ட பயிர் உற்பத்தி, அதன் ஏற்றுமதி போன்றவற்றின் நிலைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மலையக மக்களின் காணி உரிமை, வீட்டு திட்டம், பயனாளிகள் தெரிவு முறை, தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் , தற்போது அரசு வறிய மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாகவும், தொடர்ச்சியாக அமெரிக்க அரசு இலங்கைக்கு உதவிகள் வழங்குவது சம்பந்தமாக நினைவு கூர்ந்ததுடன் மலையக மக்களுக்கான உதவிகள், அவர்களுக்கான சேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தற்போது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியையும் திருப்தியும் தருவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்திருந்தார்.