நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அடை மழையினால் களனி கங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
மையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
“தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய மழை பெய்து வருகின்றது. தவலம பிரதேசத்தில் நேற்றைய தினமே நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது.
களனி கங்கையினதும் நீர் மட்டம் சில பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், வெள்ள அனர்த்தம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லையெனவும்” அவர் மேலும் கூறியுள்ளார்.
வெள்ள நிலைமை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பணிப்பாளர் மேலும் கேட்டுள்ளார்.
மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறும், இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.