மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்

0
62

உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து தன்மைக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் கூடியிருந்த நிலையில். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் விடயங்கள் கேட்கப்பட்டன.

இதன்போது அரசாங்கம் எடுக்கும் சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அமைவாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

செயற்திறன் ஆற்றல் விசேட முறைமைகளைப் பயன்படுத்தி எதிர்கால திட்டங்களை தயாரிக்க வேண்டுமென மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here