பலாங்கொடை வலேபொட பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் படு காயமடைந்த நிலையில் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை வலேபொட பிரதேசத்தில் 75 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.