மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB), முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகிறது.
துபாயிலிருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் விசாரணையாளர்கள் வாக்குமூலம் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




