முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு விழா மார்ச் 1ஆம் திகதி சாரதாமஹால் மண்டபத்தில்……

0
188

நாலாவது தொகுதி முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு விழா.
பிரிடோ நிறுவனத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தோட்ட கிராமிய முன்பள்ளி ஆசிரியைகள் கல்வி நிறுவனத்தினால் ஆரம்ப பிள்ளைப்பாராய கல்வி மற்றும் அபிவிருத்தி டிப்லோமா பாடநெறியை பூர்த்தி செய்த ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு மார்ச் மாதம் முதலாம் திகதி அட்டன் சாரதாமஹால் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

பிரிடோ நிறுவனத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் இருநூறுக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரிகளையும்  முன்பள்ளிக் கல்வித் துறையில் ஆர்வமுள்ளவர்களையும் பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட தோட்ட கிராமிய முன்பள்ளி ஆசிரியை கல்வி நிறுவனம் இதுவரை சுமார் 250 முன்பள்ளி ஆசிரியைகளை பயிற்றுவித்துள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியைகளின் பயிற்சியையும் செயன் முறை
அனுபவத்தையும் மேம்படுத்தவும் திறந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற வாய்ப்பில்லாத அல்லது வசதியில்லாத ஆசிரியைகளை பயிற்றுவிப்பதற்காகவும் நிறுவப்பட்ட இந்த பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர்களாகவும்ரூபவ் பயிற்சி பொறுப்பாளர்களாகவும் திறந்த பல்கலைக் கழக விரவுரையாளர்களும் அனுபமிக்க வளவாளர்களும் விரிவுரையாளராக கடமையாற்றுவது ஒரு சிறப்பம்சமாகும்.

இம்முறை பயிற்சி பெற்ற சுமார் 70 ஆசிரியைகள் பட்டம் பெறுகின்றனர். இந்த நிறுவனத்தை ஆரம்பித்து ஆசிரியைகளுக்கு பயிற்சி வழங்கிய பின்னர் முன்பள்ளிக் கல்வியின் தரம் சிறப்பான மட்டத்தை அடைந்துள்ளதாக கல்வியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பட்டமளிப்பு விழாவிற்கு பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தலைமை தாங்குகிறார். இலங்கை திறந்த பல்கலைக்கத்தின் மொழிகள் கற்கைத்துறை மானுட விஞ்ஞானங்கள் பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கலா சந்திமோகன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதம உரையை ஆற்றுவதுடன் விசேட அதிதியாக திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ் இராமதாஸ் கலந்து கொள்கிறார்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பிரிடோ நிறுவனத்தின் திட்ட இயக்குனர் எஸ்; கே. சந்திரசேகரன் மேற்கொண்டுள்ளார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here