முல்லைத்தீவில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவனுக்கு நேர்ந்த நிலை!

0
59

முல்லைத்தீவு ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது நேற்று(1) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசலையைச் சேர்ந்த நாகராசா ஜோன்சன் என்ற மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கு நேற்றைய தினம் ஆசிரியர் ஒருவர் தடியால் தாக்கியுள்ளார்.

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் அக்கராயன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here