மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவனுக்கு தேசிய மட்ட விருது!

0
154

நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் விருதினை பெற்றுள்ளார்.

மேற்படி மாணவன் கடந்த வருடம் கல்வி அமைச்சின் அனுசரணையுடன்  நடைபெற்றுள்ள பாடசாலைகளுக்கிடையிலான சமூக விஞ்ஞானப் போட்டியில், பாடசாலை மட்டம், கோட்டமட்டம், வலயமட்டம், மாகாணமட்ட போட்டிகளில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், தேசிமட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பாடஆசிரியர்களான திரு.எஸ்.மகேந்திரன். திருமதி எம்.கௌசல்யாதேவி செல்வி எஸ்.வசந்தகுமாரி ஆகியோருடன் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செயற்பட்டுளார்கள்.

விருதுபெற்றுள்ள மாணவனுக்கும் பங்களிப்புச் செய்துள்ள ஆசிரியர்களுக்கும் அதிபர் திரு. நுல்லதம்பி முத்துக்குமார் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கியுள்ளார்.

கே.புஸ்பராஜ் அக்கரப்பத்தனை நிரூபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here