வைத்தியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வாரத்துக்குள் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது குறித்த சுற்றறிக்கையை வௌியிடவுள்ளதாகவும், தற்போது வைத்தியர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களுடன் பேசி அவர்களது உரிமைகளை பெற்றுக் கொடுக்கத் தான் தயாராகவுள்ளதாகவும் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.