ஹல்துமுல்ல நீட்வுட் தோட்டத்திலுள்ள நீட்வுட் பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை காணப்பட்டதால், புதிய கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் நிர்மாணித்து திறந்து வைத்தார்.
நீட்வுட் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.