அட்டனில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டம்

0
89

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டம் ஒன்று 22ஆம் திகதி அட்டனில் இடம்பெறவுள்ளதுதொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 22ஆம் திகதி அட்டனில் இடம் பெறவுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அட்டன் டி கே டப்ளியூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம் பெறவுள்ள இந்த விசேட கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர்கள் ,தலைவிகள், மாவட்டத் தலைவர்கள், தலைவிமார்கள்,அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், பணிமனை உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி ,மகளிர் அணி இணைப்பாளர்கள் ,கட்சியின் உயர்பீட முக்கியஸ்தர்கள் உட்பட ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிலைப்பாடு” தொடர்பில் உரையாற்றவுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here