கொவிட்டிலிருந்து தப்ப சீனாவில் எலுமிச்சையை வாங்கி குவிக்கும் மக்கள்

0
72

சீனாவில் கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், சீன மக்கள் இந்த நோயை எதிர்த்துப் போராட உள்ளூர் முறைகளை நாடியுள்ளதால் எலுமிச்சையின் தேவை வேகமாக அதிகரித்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் வசிப்பவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் சி நிறைந்த உணவுகளை வாங்குவதால் எலுமிச்சைக்கு அதிக தேவை எழுந்துள்ளதாக எலுமிச்சை விவசாயிகள் கூறினர்.

தற்போதுள்ள எலுமிச்சை தேவைக்கு 14 மணிநேரம் உழைக்க வேண்டியுள்ளதாகவும், வாரத்திற்கு 5 முதல் 6 தொன் எலுமிச்சை பழங்களை விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது 30 தொன்கள் விற்பனை செய்வதாகவும் சீன ஊடகம் ஒன்றுக்கு விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here