கோணமுட்டாவ தோட்ட நிர்வாகத்துடன் செந்தில் தொண்டமான் பேச்சுவார்த்தை! எட்டப்பட்ட இணக்கப்பாட்டையடுத்து தேயிலையை வெளியேற்ற அனுமதி

0
124

கோணமுட்டாவ தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கோணமுட்டாவ தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்,

1.தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம் – முழு சம்பளம் வழங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

2.வலுக்கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டது – 20 கிலோ வலுக்கட்டாயமாக நிர்ணயிக்க முடியாது எனவும், தேயிலை மலைகளுக்கு ஏற்ற வகையிலே நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், 20 கிலோவாக இருந்த அடிப்படை தொகை 16 கிலோவாக குறைக்கப்பட்டது.

3.ஒவ்வொரு நிலுவைக்கும் வலுக்கட்டாயமாக 3 கிலோ தேயிலை குறைப்பு – நாளை முதல் 1 கிலோவாக மாற்றி அமைக்கப்பட்டது.

4.ஞாயிறு மற்றும் போயா நாட்கள் 1 1/2 சம்பளம் வழங்கப்படவில்லை – தற்போது வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது

5.நிபந்தனை, ஓய்வூதியத் தொழிலாளர்களுக்கு கைகாசு அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது -இனிவரும் காலங்களில் முழு சம்பளமாக வழங்கப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள்
தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தோட்ட நிர்வாகத்தால் வழங்கபட்ட ஒப்புதலை ஏற்று ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்தில் இருந்து தேயிலை தூளை ஏற்றுமதிக்கு வெளியேற்ற அனுமதி வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here