தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளராக, சண். பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த சண். பிரபாகரன், கடந்த பொதுத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஸ்தாப உறுப்பினர்களில் ஒருவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.