தீபாவளி முற்பணமாக 10 ஆயிரம் உடனடியாக வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திற்கு இ.தொ.கா தலைவர் அவசரக் கடிதம்!

0
102

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவோடும் இன்னும் இதர செலவுகளை கருத்தில் கொண்டு இம்முறை தீபாவளி பண்டிகை முற்பணத்தை 10,000 ரூபாவாக அதிகரித்து உடன் வழங்குமாறு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திடம் இ.தொ.கா தலைவரும், நுவரெலியா   மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் தலைவர் முத்து சிவலிங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தமது விசேட தினங்களை கொண்டாடுவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள். வருடத்தில் ஒருமுறை வரும் இப்பெருநாளை கொண்டாடுவதற்கு பணவசதிகள் இல்லாது பெரும் சிரமத்திற்குள்ளாகி வரும் இவ்வேளையில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உளளப்படியால் வழமையாக வழங்கும் தொகை அவர்களுக்கு போதாது. எனவே தோட்டக் கம்பனிகள் இது விடயத்தில் உரிய கவனத்தை செலுத்த நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 10 ஆயிரம் ரூபாவை பண்டிகை முற்பணமாக வழங்க இலங்கை முதலாளிமார் சம்மேளனம் காலந்தாழ்த்தாது மிக விரைவாக வழங்கப்பட வேண்டுமென தலைவர் முத்து சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்

இதொகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here