தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் பல புதிய தொழில் வாய்ப்பு உருவாக்கப்படவுள்ளதாக நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட காசல்ரீ பகுதியில் நோர்வூட் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 9 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வாசிகசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (18) மாலை நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
கே.சுந்தரலிங்கம்)