நாட்டில் நிலவும் சீரற்ற காநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்துவருகிறது.இன்று (31) திகதி அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பொது போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் ஹட்டன் கொழும்பி பிரதான வீதியில் கலுகல,பிட்டவல,கினிகத்தேனை,கடவலை,வட்டவளை,உள்ளிட்ட பகுதிகளிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓhய.கொட்டகலை,சென்கிளையார்,தலவாக்கலை,ரதல்ல நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனி மூட்ட நிலவுவதனால் இந்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களுக்குரிய பக்கத்தில் பயணஞ்செய்யுமாறும்,பனி உடனான காலநிலையின் போது முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் குளிர் மற்றும் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இதனால் மழையாக நகரங்களில் மக்களின் நடமாற்றம் குறைந்துள்ளதுடன் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அடை மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களின் வருகை குறைந்துள்ளன. இதனால் தேயிலை உற்பத்தியும் ஓரளவு சரிவடைந்துள்ளதாகவு பெருந்தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருவதனால் காசல்ரி,மவசாகலை,கெனியோன்,லக்ஷபான,விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்;த்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்ந்துள்ளன.தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதனால் வான் கதவுகள் திறக்கப்படலாம் எனவே நீர்த்தேக்கங்களின் கீழ் தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதனால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால் செயழிலந்து கிடந்த சிறிய நீர் மின் உற்பத்திகளும் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.இதனால் இந்த வீதியில் பயணஞ் செய்யும் சாரதிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இதே நேரம் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழ்பவர்களும்,மலைகளுக்கு மற்றும் மண்திட்டுக்கு சமீபமாக வாழ்பவர்கள் அனைவரும் மிகவும் மழை நேரங்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறும்,மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிலிருந்து சற்று விலகியிருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலைவாஞ்ஞன்