முன்னாள் போராளிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை!

0
114

தமிழீழ விடுதலைப் புலிகளில் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று வந்தவர்களின் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவு செய்யுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சியினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் மரணத்தை தழுவி வருவதாகவும் இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருவதாகவும் இவற்றை கருத்திற்கொண்டு முன்னாள் பேராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எப்பகுதியில் இருக்கும் முன்னாள் பேராளிகளும் 0777735081, 0773169997 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இலவச மருத்துவ பரிசோதனைக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here