மோடியை வரவேற்க அனைவரும் வருகைத்தர வேண்டும் மேதின கூட்டத்தில் ஆறுமுகன்!

0
94

டிக்கோயா மாவட்டவைத்தியசாலைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர்மோடியை வரவேற்க இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஆதரவாளர்கள் அனைவரும் வருகைத்தரவேண்டும் என இலங்கை தொழிலாள.ள் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமான் அழைப்பு விடுத்தார் கினிகத்தேன நகரில் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்ரஸின் மேதினகூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

அம்பகமுவ பிரதேச செயலகத்லிருந்து ஆரம்பமாகியபேரணி கினிகத்தேன பஸ்தரிப்பிடத்தை வந்தடைந்து கூட்டம் ஆரம்பமாகியது மேதினக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முத்து சிவலிங்கம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி அபேசேகர. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்ச மஹிந்து அமரவீர ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மத்திய மாகாண விவசாய இந்து காலசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ் பி.சக்திவேல்.பிலிப்குமார்.ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணசபை இ.தோ.கா உறுப்பினகள்அமபகமுவ .நுவரெலியா முன்னால் பிரதேச சபை தலைவர்கள் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் காங்கிரசுக்கு நிகர் காங்கிரசுக்கு மட்டுமே இன்று சில மோடியின் மலையக வி ஜயத்தை வைத்து அரசிசியல் நடத்துகின்றாகள் அய்யா சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க இந்திய அரசாங்கத்தின் நீதியுவியுடன் டிக்கோயா மாவட்ட வை.தியசாலையின் புதிய க.டிடத்திதிற்கு நானே அடிக்கல்நாட்டினேன், சிலர் தாமே த மோடியை இலங்கைக்கு அழைத்துவருவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் அது பொய் இலங்கை அரசாங்கத்தின் பேரிலே மோடியின் இலங்கையின் விஜயம் ஏற்பாடுசெய்யப்டுகின்றது இந்திய அரசாங்கத்தினால் இலங்கை தொழிலாளர் எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆகவே நீங்கள் அனைவரும் எதிர்வரும் 12 ம் திகதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு வருகைத்தந்து இந்திய பிரதமரை வரவேற்கவேண்டும் மேலும் இந்த மேதினத்தில் நான்கு பிரகனத்தை

முன்வைக்கின்றேன் ஜே.டீ.பி தோட்டங்கள் கைமாறுவதை தடுக்கவேண்டும். அவர்களுக்கான கொடுப்பனவை வழங்க வேண்டும் தோட்ட சேவையாளர்களுக்கு வீடமைப்பு தீட்டங்கள் வழங்க வேண்டும். தொடந்து தொழிலாளர்களாக வாழ முடியது எமது மக்கள் சிறு தோட்ட உரிமையாளர்களாக ஆக வேண்டும் நான்கு அம்ச பிரகடத்தை மேடையில் அறிவித்தார் மேலும் மேதினக்கூட்டத்திலும் பேரணியீலும் பெருமளவிலனோர் கலந்துகொண்டனர்.

பொகவந்தலாவை நிருபர் எஸ். சதீஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here