ராகலை பகுதியில் மண்சரிவு அபாய அச்சத்தில் 23 குடும்பங்கள் வெளியேற்றம் !

0
98

ராகலை தோட்டம் மற்றும் ஹல்கரனோயா தோட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போது ஹல்கரனோயா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளனர். இவர்களில் 39 சிறுர்களும் அடங்குவர். பாதிக்கபட்டவர்களுக்கான முதற்கட்ட நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை கிராமசேவகர்¸ தோட்ட நிர்வாகம் உட்பட பொது மக்கள் மேற் கொண்டு வருகின்றனர்.

IMG_4084

இரண்டாம் கட்ட நவடிக்கையாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனத்தின் புவிசரிதலியல் அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கை மேற்க் கொண்டு இவர்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்க தோட்ட நிர்வாகம் உட்பட அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

IMG_4078

மேற்படி பாதிக்கபட்ட மக்களை பார்வையிடுவதற்காக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம்¸ திருமதி சரஸ்வதி சிவகுரு குறித்த இடத்திற்கு விஜயம் செய்தனர் இதன் போது தோட்ட நிர்வாகத்துடன் பேசி இவர்களுக்கான வீட்டு திட்டத்தை துரிதகெதியில் முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்க் கொண்டனர்.

IMG_4081

பா.திருஞானம்- க. கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here