ராகலை சமிகபுற வனபகுதியில் உள்ள குகை ஒன்றில் இருந்து இரண்டு ஆணிண் சடலம் மீட்கபட்டுள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர் இந்த இரண்டு சடலங்களும் 16.09.2018.காலை 08மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவிவத்தனர்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ராகலை சமிகபுற வனபகுதியில் உள்ள குகை ஒன்றிற்குள் முள்ளபண்டியினை வேட்டையாடுவதற்காக 15.09.2018 காலை வேலையில் சமிகிபுற வனபகுதியில் உள்ள குகை ஒன்றிற்குள் சென்ற இருவர் குறித்த குகையினுல் செல்வதற்கு குகையின் உள்ளே ப+கையினை விட்டு குகைக்குள் முள்ளபண்டி வருமவரை குகையினுல் இருவரும் ஒழிந்து இருந்ததாகவூம் அதன் பிறகு இந்த இரண்டு பேரும் உயிர் இழந்து இருக்கலாம் மென ராகலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவத்தில் உயிர் இழந்தவர்கல் ராகலை சென்லியாட்ஸ் மத்திய பிரிவை சேர்ந்த 31வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அசோக்குமார் என்பவரும்இமற்றய நபர் சென்லியாட்ஸ் கனிக்கா தோட்டபகுதியை சேர்ந்த 29வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரத்னேஸ்வரன் ஆகியோரை இந்த சமிகிபுற வனபகுதியில் இருந்து சடலமாக மீட்கபட்டதாக ராகலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இரண்டு பேரையூம் 15.09.2018.சனிகிழமை மாலை வரை வீட்டுக்கு வாராமை குறித்து ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றும் பதிவூ செய்யபட்டது பதிவூ செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய ராகலை சென்லியாட்ஸ் தோட்டமக்கள் மற்றும் பொலிஸார் இனைந்து குறித்த இரண்டு பேரையூம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த இரண்டு பேரின் சடலம் சமிகிபுற வனகபகுயில் உள்ளகுகை ஒன்றில் இருந்து மீட்பட்டதாக தெரிவிக்கபடுகிறது
ராகலை பொலிஸாரால் மீட்கபட்ட இரண்டு சடலங்கள் தொடர்பில் விசாரனைகலை ஆரம்பித்த ராகலை பொலிஸார் சம்பவம் இடத்திற்கு தடையியல் பொலிஸார் வரவலைக்கபட்டு விசாரனைகலை ஆரம்பித்துள்ளதோடு மரண விசாரனைக்காக நுவரெலியா மாவட்ட நீதி மன்ற நீதவான் வரவலைக்கபடஉள்ளதாகவூம் ராகலை பொலிஸார் குறிப்பிட்டனர்
நீதவானின் மரணவிசாரனைகள் இடம் பெற்றவூடன் இரண்டு சடலங்களும் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
எஸ் .சதீஸ்.