லிபியாவில் புயல்: 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

0
76

கிழக்கு லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புயலுடன் கனமழையும் கொட்டித்தீர்த்ததனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கிக்கொண்டனர்.

இதனால் கிழக்கு லிபியாவின் டேர்னா நகர் அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்த பகுதி அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் என்பன தடைப்பட்டிருப்பதால், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை டெர்மா நகரில் மாத்திரம் இதுவரையில், ஆயிரத்து 200இற்கும் அதிகமானோர், காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.டேனியல் புயல் காரணமாக, பெரும்பாலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here