வெள்ள அனர்த்தம் 600 மில்லியன் தேயிலை உற்பத்தியில் நட்டம்; 14 தேயிலை தொழிற்சாலைகள் முற்றாக சேதம்!

0
97

அண்மையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலமை காரணமாக, தேயிலை உற்பத்தியில் 600 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை நிலையத்தின் ஆணையாளர், ஜயந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த அனர்த்தத்தால், 26 தேயிலை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 தொழிற்சாலைகள் முற்றாக சேதமடைந்துள்ளது.

மேலும் சிறிய அளவிலான தேயிலை தோட்டங்ளை சேர்ந்த உரிமையாளர்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here