8வது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் பலி

0
69

கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது கணவர் நேற்று முன் தினம் (07) தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here