அதிக விலைக்கு மதுபான போத்தல்கள் : பொகவந்தலாவையில் பறிமுதல்

0
119

பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் கொண்டுச் செல்லப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுபான போத்தல்களை விற்பனைக்காக கொண்டுச் சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 150 மதுபான போத்தல்கள் கெப்பியன் நகரில் வைத்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சந்தேக நபருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here