பொலித்தீன் பையில் சுற்றிய நிலையில் 6 மாத சிசுவின் சடலம் மீட்பு

0
137

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வீடொன்றிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த வீட்டை சோதனையிட்ட போது பொலித்தீன் பை ஒன்றில் போடப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here