ஒரு வயது குழந்தையொன்று தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.
உடுகம-மஹவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தை தனது இரு சகோதரர்களுடன் நீராடிக் கொண்டிருந்த போது வாளியினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.