உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு குரங்கு காய்ச்சலை கண்டறிவதற்கான பரிசோதனை கருவிகளை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.
இந்த பரிசோதனை கருவிகள் நாடு முழுவதும் வைக்கப்பட்டு, மாதிரி பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கண்டி உள்ளிட்ட பல இடங்களில் நிறுவப்பட்டுள்ள பரிசோதனை நிலையங்கள் மூலம் நோய் அறிகுறி உள்ள நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.