பெருவில் கோர விபத்து 13 பேர் உடல் கருகி பலி

0
115

பெரு நாட்டில் பேருந்து-ஆட்டோ இடையே நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 13 பேர் உடல் கருகி பலியாகினர்.

தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் இருந்து அதன் தலைநகரான லிமாவுக்கு ஒரு பேருந்து சென்றது. இந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர். அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக ஒரு ஆட்டோ வந்தது. அப்போது பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதின.

இதில் பேருந்தும், ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தன. இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேருந்து சாரதியை கைது செய்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here