மாவெளி காட்டில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!

0
90

பொகவந்தலாவ ராணிகாடு மாவெளி காட்டு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழவ்pல் ஈடுபட்ட 05பேரை பொகவந்தலாவ பொலிஸார் 13.11.2017 திங்கள் கிழமை மாலை 04 மணி அளவில் கைது செய்தள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இவர்கள் கைது செய்யபட்டதாக தெரிவிக்படுகிறது.

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்க்கு பயன்படுத்த பட்ட நீர் இறைக்கும் மோட்டார், இயந்திரம் பிளாஸ்டிக் குழாய் மண் வெட்டி போன்ற உபகரணங்களையும் பொகவந்தலாவ பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

கைது செய்யபட்டவர்கள் 5பேரும் இராணிகாடு தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் ஜேப்பல்டன் தோட்டத்தைச் சோந்த 01வரும் கைதுசெய்யபட்டுள்ளனர்.

IMG-7cae7cd19bf1ebf054c333c95f5be753-VIMG_20171113_170425 - Copy

இதேவேலை சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடகின்றவர்கள் மாவெளி காட்டு பகுதியில் பாரிய குழிகளை தோன்யறியுள்ளதாகவும் தெரிவித்தனர். இதேவேலை கைது செயய்பட்ட 05பேரும் 14.11.2017.செவ்வாய் கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here