ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை

0
127

https://karudannews.com/நாளை-முதல்-எரிபொருள்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட இரண்டாவது வழக்கிற்காக இன்று செவ்வாய்க்கிழமை அவர் உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021 ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, அவர் தற்போது அத்தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

இந்நிலையில், இன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here