Home Blog Page 1171

சிறுமியின் உயிரிழப்புகு நீதி கோரி போராட்டம்……!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம மேற்கு தோட்ட சிறுமி யின் உயிரிழப்புகு நீதி கோரி, கொட்டகலை திம்புள்ள தோட்டத்தில் இன்று (27) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திம்புள்ள தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் இந்தப்போராட்டத்தை தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள பகுதயில் உள்ள அம்மன் கோவிலுக்கு முன்பாக நடத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள்வரை இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இதன்போது குரல் எழுப்பட்டது.

க.கிஷாந்தன்

 

இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டோருக்கும் டெல்டா பாதிப்பை ஏற்படுத்தலாம்…….!

0

கொவிட் தொற்றுக்கான இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டோருக்கும் டெல்டா பாதிப்பை ஏற்படுத்தலாம் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் ஆதாரங்கள் கிடைத்து வருவதாக தொற்றுநோயியல் நிபுணர்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சில நாடுகளில் தற்போது தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் இது ஒரு சவாலாக அமையும்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தவதற்கும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் கொவிட் தடுப்பூசிகள் செயற்படுகின்றன.

இருப்பினும், உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என தொற்றுநோயியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொத்மலை பொலிஸ் பிரிவில் வீடொன்றிலிருந்து 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு.

0
கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை, மேல் கடைவீதி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, 15 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
சடலம் மீதான பிரேத பரிசோதனை, இன்று காலை நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் விக்நேஸ்வரன் விதுஷா (15 வயதும் 7 மாதங்களும்) என்பவராவார்.
 
இந்த சிறுமி தனது வீட்டில் தனி அறையிலிருந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.
 
இதையடுத்து, நேற்று திங்கட்கிழமை அதிகாலை 04 மணியளவில் சிறுமியின் பெற்றோர் 119க்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுமியின் சடலத்தை மீட்டதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
 
டி.சந்ரு

நாட்டை வந்தடைந்த 1,600,000 சைனோபாம் தடுப்பூசிகள்……!

0

மேலும் 16 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து விமானமொன்றின் மூலம் அந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட தேடுதல் வேட்டை.

0

வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறார்களை கண்டறிவதற்காக மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பணிக்கமர்த்தப்பட வேண்டிய வயதெல்லையை விட குறைந்த வயதுடையவர்களை பணிக்கமர்த்தியுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது ருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று.

0

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (27) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில், 1 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி, முன்னிலையில் உள்ளது.

மலையக சிறார்கள் கூலி வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுப்பதற்கான கலந்துரையாடல் வேலுகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது….

0

மலையக சிறார்கள் கூலி வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுப்பதற்கும், அவர்களுக்கான கல்வி உரிமையை உறுதிப்படுத்தி வளமானதொரு எதிர்காலத்துக்கு அடித்தளமிடுவதற்கான தேசிய பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் இன்று கண்டியில் நடைபெற்றது.

மலையகத்தில் கடும் மழை வான்கதவுகள் திறப்பு -மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

0

மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றன. நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக கெனியோன் மற்றும் லக்ஸபான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (26) திகதி மாலை முதல் சுமார் ஆறு அங்குலம் திறக்கப்பட்டதாக மின்சார துறையைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்;.

விஷாலினியின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றத்தினால் அனுமதி….

0

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்பேரியல் தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய செந்தில் தொண்டமான்

0

பலாங்கொடை பிளான்டேஷனுக்கு உட்பட்ட நன்பேரியல் தோட்டம் நெக்ரக் பிரிவு மக்களுக்கு உலர் உணவு பொருட்களை சிவன் அருள் அமைப்பாள் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தோட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் சிவன் அருள் அமைப்பினர் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டத்தை தொடர்ந்து குறித்த அமைப்புக்கு எவ்வித தடைகளுமின்றி தோட்டத்தில் சென்று உலர்வு உணவு பொருட்களை வழங்குவதற்கான அனுமதியை அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.